லாரா சதம் .. வலுவான நிலையில் மே.இ. தீவுகள்
அடிலைட்:
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மேற்குஇந்தியத் தீவுகள் அணியின் பிரையன் லாரா சதம் எத்டுத்தார்.
அடிலைட் நகரில் வெள்ளிக்கிழமை இப்போட்டி துவங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள்அணி முதலில் பேட் செய்தது. துவக்கத்தில் விக்கெட்டுகளை விறுவிறுவென வீழ்ந்தாலும் கூட, முன்னாள் கேப்டன்பிரையன் லாராவும், இப்போதைய கேப்டன் ஜிம்மி ஆடம்ஸும் நின்று ஆடி, சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்தனர்.

ஆட்ட நேர முடிவிற்கு சில நிமிஷங்களுக்கு முன்பு இந்தத் தொடரில் தனது முதல் சதத்தை எட்டினார் லாரா. இந்தப்போட்டியில் முதலில் லாரா கலந்துகொள்வதாக இல்லை. காயம் காரணமாக அவர் கலந்து கொள்வது சந்தேகத்தில்இருந்தது. ஆயினும் கூட கடைசி நிமிடத்தில் தனது வருகையை உறுதி செய்தார் லாரா.
மிகவும் வசதியான வகையில், தனது 15-வது டெஸ்ட் சதத்தை எட்டினார் லாரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இது6-வது சதமாகும் இது. மொத்தம் 199 நிமிடங்கள் களத்தில் இருந்து, 140 பந்துகளைச் சந்தித்து 100 ரன்களைஎட்டினார் லாரா. மெக்கில் பந்தில் 3 ரன்கள் எடுத்து தனது சதத்தை எட்டினார் லாரா.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் லாரா சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இரண்டுபோட்டிகளின் நான்கு இன்னிங்ஸ்களிலும் 0, 4, 0, 17 என லாராவின் ஸ்கோர் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா ஏஅணியுடன் நடந்த போட்டியில் இரட்டை சதம் எடுத்து தனது அதிரடியை உணர்த்தினார் லாரா. இந்தப் போட்டியில்முற்றிலும் வித்தியாசமான லாராவை ரசிகர்கள் பார்த்தனர்.
மெக்கிராத்தையும், கில்லஸ்பியையும் அடித்து நொறுக்கினார். அவர்களது பந்துகளை எல்லாம், பவுண்டரிக்குஅனுப்பினார். அவர்களது பந்துகளில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்தார்.












Click it and Unblock the Notifications