மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட்: அரை இறுதியில் இந்தியா
கிரைஸ்ட் சர்ச் (நியூசிலாந்து):
உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை 141 ரன்கள்வித்தியாசத்தில் தோற்கடித்து அரை இறுதிக்கான தனது இடத்தை உறுதி செய்ததுஇந்தியா.
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது .
லின்கோனில் வெள்ளிக்கிழமை இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான லீக்போட்டி நடந்தது. இதில் இந்திய அணி சிறப்பாக ஆடி 141 ரன்கள் வித்தியாசத்தில்இலங்கையை வென்றது.
இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்கள் சந்திரகாந்த கவுலும் அணியின் துணைகேப்டன் அன்ஜும் சோப்ராவும் ஆவர். இருவரும் சேர்ந்து 151 ரன்கள் எடுத்தனர்.அன்ஜும் சோப்ரா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டாசில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியின்துவக்க ஆட்டக்கார்களாக கேப்டன் அஞ்சு ஜெயினும், ஸ்மிதா ஹரிகிருஷ்ணாவும்களமிறங்கினர்.
ஸ்மிதா 58 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அவர் இந்திய அணியின் எண்ணிக்கை 51ரன்களாக இருந்த போது ஆட்டமிழந்தார்.
அதன் பின் சந்திரகாந்தாவும் அன்ஜூம் சோப்ராவும் ஜோடி சேர்ந்து இலங்கைபந்துவீச்சாளர்களை நிலை குலையச் செய்தனர். ஒரு முனையில் அன்ஜும் நிதானமாகஆடிக் கொண்டிருந்தார். மறுமுனையில் சந்திராகாந்தா ரன்களை குவித்துக்கொண்டிருந்தார்.
இந்தியத் தரப்பில் சந்திரகாந்தாதான் அதிக ரன்கள் எடுத்தார். அவர் 82 பந்துகளில் 80ரன்கள் குவித்தார். 8 பவுன்டரிகளை அவர் விளாசினார்.
சோப்ரா 104 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 230 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி துவக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்துக் கொண்டிருந்தது.அணியின் எண்ணிக்கை 1 ரன்னாக இருந்தபோதே இலங்கை 2 விக்கெட்டுகளைஇழந்து தவித்தது.
இலங்கை அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. எந்தஜோடியும் நம்பிக்கையூட்டும்படியாக விளையாடவில்லை. ரன் அவுட் மூலமே 4விக்கெட்டுகளை இழந்தனர்.
அணிகளின் வரிசையில், மூன்றாவது இடத்தைப்பெற்றுள்ள இந்தியா அரை இறுதியில்,நியூசிலாந்து அணியுடன் மோதும். லீக் போட்டியில் இந்தியாவை, நியூசிலாந்துவீழ்த்தியுள்ளதால், அரை இறுதிப் போட்டி கடுமையாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications