தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதம்?
டெல்லி:
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாகக் கைவிடாவிட்டால் ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை பணிக்குத் திரும்ப மாட்டோம் என்று தபால் துறைஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் கடந்த 11நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் தபால்பட்டுவாடா ஸ்தம்பித்தது.
இதற்கிடையே, தபால் ஊழியர்கள் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2 வது சுற்றுப் பேச்சுவார்த்தை:
தபால் ஊழியர்கள் பிரச்சனை 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில் மத்திய அரசு வியாழக்கிழமை, தபால்ஊழியர்கள் சங்கத்துடன் 2 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதுகுறித்து தபால் ஊழியர்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வேலை நிறுத்தம் தொடர்பாகமத்திய அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும் எங்களது கோரிக்கைகள்நிறைவேற்றப்படும் வரை நாங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட மாட்டோம் என்றார்.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தபால் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. சில கோரிக்கைகள்இன்னும் பரிசீலனையில் உள்ளது. இதை அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டோம். இந்நிலையில் விடாப்பிடியாகஅவர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடமாட்டோம் என்று கூறிக் கொண்டிருந்தால் அவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்விஷயத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளதால், நாங்கள் விரைவில் இப்பிரச்சனையில் ஒரு முடிவுஎடுத்தாக வேண்டும். எனவே அத்தியாவசியப் பணிகள் பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்த (எஸ்மா) உள்ளது.
வேலைநிறுத்தம் சட்டவிரோதம்:
இந்நிலையில் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.பொதுமக்கள் சேவையில் உள்ள எந்த ஒரு நபரும், பணியில் உள்ள போது, 7 நாட்களுக்கு மேல் வராமல்இருந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று தொழிற்சாலை தாவா தட்டத்தில் கூறப்பட்டுள்ளதுஎன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கவனஈர்ப்புத் தீர்மானம்:
இதற்கிடையில் வேலை நிறுத்தம் தொடர்பாக லோக்சபாவில் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications