தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதம்?
டெல்லி:
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாகக் கைவிடாவிட்டால் ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை பணிக்குத் திரும்ப மாட்டோம் என்று தபால் துறைஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் கடந்த 11நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் தபால்பட்டுவாடா ஸ்தம்பித்தது.
இதற்கிடையே, தபால் ஊழியர்கள் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2 வது சுற்றுப் பேச்சுவார்த்தை:
தபால் ஊழியர்கள் பிரச்சனை 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில் மத்திய அரசு வியாழக்கிழமை, தபால்ஊழியர்கள் சங்கத்துடன் 2 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதுகுறித்து தபால் ஊழியர்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வேலை நிறுத்தம் தொடர்பாகமத்திய அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும் எங்களது கோரிக்கைகள்நிறைவேற்றப்படும் வரை நாங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட மாட்டோம் என்றார்.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தபால் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. சில கோரிக்கைகள்இன்னும் பரிசீலனையில் உள்ளது. இதை அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டோம். இந்நிலையில் விடாப்பிடியாகஅவர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடமாட்டோம் என்று கூறிக் கொண்டிருந்தால் அவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்விஷயத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளதால், நாங்கள் விரைவில் இப்பிரச்சனையில் ஒரு முடிவுஎடுத்தாக வேண்டும். எனவே அத்தியாவசியப் பணிகள் பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்த (எஸ்மா) உள்ளது.
வேலைநிறுத்தம் சட்டவிரோதம்:
இந்நிலையில் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.பொதுமக்கள் சேவையில் உள்ள எந்த ஒரு நபரும், பணியில் உள்ள போது, 7 நாட்களுக்கு மேல் வராமல்இருந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று தொழிற்சாலை தாவா தட்டத்தில் கூறப்பட்டுள்ளதுஎன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கவனஈர்ப்புத் தீர்மானம்:
இதற்கிடையில் வேலை நிறுத்தம் தொடர்பாக லோக்சபாவில் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications