அதிபராகிறார் முஷாரப்?
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் செயல் அதிகாரியாக உள்ள ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த ஜெனரல் பெர்வீஸ் முஷாரப்,அந்நாட்டு அதிபர் பதவியைக் கைப்பற்ற முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் பிரதமர் பதவி முறையை ஒழித்து விட்டு, அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரவும் அவர்திட்டமிட்டுள்ளார். முதல் அதிபராக தானே வரவும் அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான சட்ட மசோதா தயாராகிக் கொண்டிருப்பதாகவும், தேவையான சட்டத் திருத்தம் விரைவில்மேற்கொள்ளப்படும் என்று தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அவர் ரபீக் தரார், உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால், தன்னை, பதவியிலிருந்து விடுவிக்குமாறுஅரசிடம் கேட்டுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு கூட்டப்பட்ட உயர் ராணுவ தளபதிகள் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராணுவ ஆட்சியாளர் என்ற வட்டத்திலிருந்து வெளிவந்து ஆட்சியாளர்என்ற புதிய அந்தஸ்தில் அமர முஷாரப் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பேச்சுஅடிபடுகிறது.
இருப்பினும், ராணுவப் புரட்சிக்குப் பின் முடக்கப்பட்ட மாநில சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு மீண்டும்உயிர் தரப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.
முஷாரப் அதிபர் பதவிக்கு வந்தால், இலாஹி பக்ஷ் சூம்ரா அல்லது வாசிம் சஜ்ஜத் ஆகியோரில் ஒருவர் பிரதமர்பதவியில் நியமிக்கப்படலாம் என்று இப்போதே பேச்சு அடிபடத் துவங்கி விட்டது. அதன் பிறகு அமைக்கப்படும்இடைக்கால அமைச்சரவையில், முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக்கின் மகன், இஜாஸ் உல் ஹக், பக்கீர் இமாம்,மியான் அஸார் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications