நெடுமாறன் மீதான வழக்கு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டு வந்த நெடுமாறன் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்க காட்டுக்குள் சென்ற தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மீதும் அவருடன் சென்றவர்கள் மீதும் வழக்குப்பதிவுசெய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு கர்நாடக மாநில போலீஸ் சங்கத்தலைவர் சசிதர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் அமைப்பு 226வதுபிரிவின் படி அரசுக்கு உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications