இந்தியா பலம் பொருந்திய நாடு .. காலின் பாவல்
வாஷிங்டன்:
இந்தியாவை பிராந்திய அளவில் பலம் பொருந்திய நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்றுஅமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்கவுள்ள காலின் பாவல் கூறியுள்ளார்.
ஜார்ஜ் புஷ் ஜூனியர் அரசியல் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் காலின் பாவல்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அப்ராட் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாமிகவும் வளம் வாய்ந்த நாடு. அங்கு ஏராளமான திறமை மறைந்துள்ளது. எனவே இந்தியாவை பலம் பொருந்தியநாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும். பாதுகாப்புத் துறையிலும் இந்தியாவை அமெரிக்கா அங்கீகரிக்கவேண்டும்.
1997-ல் நான் இந்தியா சென்றுள்ளேன். இருப்பினும் சில நாட்களே அங்கு தங்கியிருந்தேன். இந்தியாவின்முக்கியத்துவத்தை நான் முழுவதுமாக உணர்ந்துள்ளேன்.
தற்போது பனிப் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவுடன் அமெரிக்கா நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவை பிராந்திய சூப்பர் பவராக அங்கீகரிக்க வேண்டும். உலக அளவில் முக்கியப்பங்காற்றும் தகுதி இந்தியாவுக்கு இருப்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றார் பாவல்.
1991-ம் ஆண்டு நடந்த வளைகுடாப் போரின் கதாநாயகன் பாவல் என்பது யாராலும் மறக்க முடியாதது. சதாம்உசேனுக்கு எதிராக உறுதியான ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா எடுத்ததற்குப் பின்னணியில் இருந்தவர்பாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமைக்காவைத் தாயகமாகக் கொண்ட பெற்றோருக்குப் பிறந்தவர் பாவல். இவரது நியமனம், அமெரிக்கநாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்ட வேண்டும். அப்படி அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்க அரசின் உயர்பதவியில் அமரும் முதல் கருப்பர் என்ற பெருமை பாவலுக்குக் கிடைக்கும்.
உலகம் முழுவதும் அமெரிக்க ராணுவம்:
இதற்கிடையே, உலகம் முழுவதும் அமெரிக்க ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று பாவல் கூறியுள்ளார்.
தலைநகர் வாஷிங்டனில் அவர் கூறுகையில், உலகம் முழுவதும் அமெரிக்க ராணுவ வீரர்களை நிறுத்துவதுதொடர்பாக புஷ் அரசு பரிசீலிக்கும்.
ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு மீதான பொருளாதார தடைஅதிகரிக்கப்படும். சதாம் உசேன் தொடர்ந்து அபாயகரமான ஆயுதங்களைத் தயாரித்து வருகிறார். அதைத் தடுக்கஇதுவே சரியான வழி.
ஈராக்கியர்களைப் பாதிக்காத வகையில், பொருளாதாரத் தடை இருக்கும். அபாயகரமான ஆயுதங்களிலிருந்துவளைகுடாப் பகுதியைப் பாதுகாக்கும் விதத்திலேயே இந்த நெருக்கடி தரப்படுகிறது.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதி நிலவ தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்ரேலுக்குப் பாதுகாப்புஅளிக்கும் அதே நேரத்தில், பாலஸ்தீனியர்களின் உரிமையைப் பாதுகாக்கவும் அமெரிக்கா முக்கியத்துவம்கொடுக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications