குன்னூரில் கோவில் சிலை சேதம்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

குன்னூரில் முனீஸ்வரன் கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கடையடைப்பு, ஊர்வலம்நடந்தது. இதனால் நகரில் பதட்ட நிலை ஏற்பட்டது.

குன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில், ஓட்டுப் பட்டறை கரபள்ளம் பகுதியில்மிகவும் பழமை வாய்ந்த முனீஸ்வரன் கோயில் உள்ளது.

இந்தக் கோயில் திறந்த வெளியில் இருந்து வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாரோ சிலர் புகுந்துஅங்கிருந்த இரண்டு முனீஸ்வரன் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

வழக்கம் போல வழிபாடு நடத்த பக்தர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது சிலை உடைக்கப்பட்டது தெரியவந்தது.சிலை உடைப்புச் சம்பவம் அருகில் இருந்த கிராமங்கள் உட்பட குன்னூர் நகரில் பரவியது. கடைகள்அடைக்கப்பட்டன. விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த அரிகர கிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்சிலை உடைக்கப்பட்ட கோயிலிருந்து ஊர்வலமாகச் சென்றனர்.

கோயில் சிலையை உடைத்தவர்களைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி கோஷமிட்டனர். இதனால்,குன்னூரில் திடீர் பதட்டம் ஏற்பட்டது தணிந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திறகு விரைந்து சென்றுநிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+