திருச்சி பாரத கனரக ஆலையில் 17 கோடியில் நவீன இயந்திரம்
திருச்சி:
ரூ 17 கோடி விலைமதிப்புள்ள நவீன ரக பைப் வளைக்கும் இயந்திரத்தை திருச்சி பாரத கனரக தொழிற்சாலை (பி.எச்.ஈ.எல்.) வாங்கியுள்ளது.
இந்த பைப் வளைக்கும் இயந்திரம் உலகில் ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பி.எச்.ஈ.எல். நிறுவன பொதுமேலாளர்ராமச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். பி.எச்.ஈ.எல். நவீனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
அதிக ஆற்றல் மற்றும் அதிக அழுத்தம் கொண்ட நவீன பைப்புக்களை வளைக்க இந்த இயந்திரம் உதவும். 500 மெகாவாட் திறன் கொண்டபாய்லர்களை தயாரிக்க இந்த இயந்திரம் உதவும். இதுவரை இந்த பாய்லர்கள் வெளிநாடுகளிலிருந்துதான் வாங்கப்பட்டு வந்தன. இப்போது புதிய இயந்திரம்வந்துள்ளதால், இங்கேயே இதைத் தயாரிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணி சேமிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இயந்திரத்தை இயக்க குறைந்த அளவிலான மின்சக்தியே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications