2 நாளில் தபால் சேவை சீரடையும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவை அடுத்த இரண்டு நாட்களில் வழக்கம் போல் நடக்கும் என்று தமிழக தலைமைதபால் அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 12, 200 தபால் நிலையங்கள் உள்ளன. 92 தபால் நிலையங்களில் தபால் சேவைகள் முழு மூச்சுடன்தொடங்கி நடந்து வருகின்றன.
செவ்வாய்க்கிழமை அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து ஊழியர்களும் வந்திருந்தனர். சி பிரிவு ஊழியர்கள் 18, 435 பேர், 6800 போஸ்ட் மேன்கள்,4032 க்ரூப் டி ஊழியர்கள் மற்றும் ஏஜன்ட்டுகள் 25, 858 பேர் தபால் பட்டுவாடாவில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 13 நாட்களாகத் தேங்கிக் கிடந்த தபால் பணிகள் விரைவில் முடியும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications