இந்திய மாணவர் சாதனை
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் கான்பரா பல்கலைக் கழக தேர்வில் இந்திய மாணவர் ஒருவர் புதியசாதனை நிகழ்த்தியுள்ளார்.
கான்பரா நரபந்தா கல்லூரி மாணவரான ரொமீந்தர் குரோவர், தனது தேர்வில் 100 சதவீதமதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பல்கலைக் கழகத் தேர்வில் 100 சதவீதமதிப்பெண்களை ஒரு மாணவர் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
9 ஆண்டுகளுக்கு முன்பு கான்பரா பல்கலைக்கழகத் தேர்வுகளில் புதிய மதிப்பெண் முறைஅறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு ஒரு மாணவர் 100 சதவீத மதிப்பெண்களைப்பெறுவது இதுவே முதல் முறை. தேர்வு நடந்த நான்கு பாடங்களிலும் 100 சதவீதமதிப்பெண்களை குரோவர் பெற்றுள்ளார். இது ஒரு சாதனை.
தற்போது தனது அடுத்த கட்ட படிப்பில் இந்தோனேசிய மொழியைப் படிக்கப் போகிறார்குரோவர். அத்தோடு, மேல் படிப்பில் அறிவியல் அல்லது மருத்துவம் படிக்கத்திட்டமிட்டுள்ளார். படிக்க வேண்டும் என்பதற்காகப் படிக்க தான் விரும்பவில்லைஎன்கிறார் குரோவர்.
குரோவர் தவிர இன்னொரு இந்திய மாணவரும் சாதனை படைத்துள்ளார். மாரிஸ்ட்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சித்தார்த் வோரா, முதல் பத்து மாணவர்களில் ஒருவராகவந்துள்ளார்.
கான்பரா பல்கலைக்கழகத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இங்கு படிக்கும்மாணவர்களில், இந்திய மற்றும் பிற ஆஸ்திரேலியா அல்லாத மாணவர்கள்தான் படிப்பில்முன்னணி வகிக்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.