For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகள் தாக்குதலில் இலங்கை கடற்படை வீரர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையின் கிழக்கு மட்டக்களப்பு நகரில், உள்ள ராணுவம் மற்றும் கடற்படை கூட்டுப் பாதுகாப்பு முகாமில் விடுதலைப்புலிகள் செவ்வாய்க்கிழமைநடத்திய தாக்குதலில் ஒரு கடற்படை மாலுமி கொல்லப்பட்டார். மூன்று வீரர்கள் காயமடைந்தனர்.

வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் எத்தனை விடுதலைப்புலிகள் இறந்தனர் என்று தெரியவில்லை. ராணுவ செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக்கூறுகையில், மட்டக்களப்பில் உள்ள சாத்துக்கொண்டான் ராணுவ முகாமில் திங்கள்கிழமை விடுதலைப்புலிகள் ஆர்ட்டிலரி மற்றும் மோர்ட்டார்களை வீசித்தாக்குதல் நடத்தினர்.

1 மணி நேரம் இந்த தாக்குதல் நடந்தது. பாதுகாப்புப் படை வீரர்களும் திருப்பித் தாக்கினர். தாக்குதலில் ஒரு கடற்படை மாலுமி உயிரிழந்தார். 3வீரர்கள் காயமடைந்தனர்.

இப்பகுதியில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா என்று இலங்கை ராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் முகாமிட்டுக் கண்காணித்துக்கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடந்தது என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X