அப்துல் லத்தீப் மீதான வழக்கு தள்ளுபடி
டெல்லி:
காயிதே மில்லத் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி தேசிய லீக் கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் தாக்கல் செய்திருந்தமனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காயிதே மில்லத் அறக்கட்டளையின் பொதுச்செயலாளராக அப்துல் லத்தீப் இருந்து வருகிறார். அறக்கட்டளைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளநிர்வாகிகள் கூட்டத்திற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ராஜேந்திர பாபு, பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அவர்கள் அளித்த தீர்ப்பில், லத்தீப்பின்வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தனர்.
ஏற்கனவே இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்துல் லத்தீப் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.