ஆப்கன் மீது ஐ.நா. பொருளாதார தடை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தான் மீது ஐ. நா. சபை பொருளாதாரத் தடையும், ஆயுதங்கள் வாங்குவதற்கான தடையையும் விதித்துள்ளது.

ஐ.நா.சபையில் உள்ள 15 பேர் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஆதரவாக 13 பேர் வாக்களித்தனர்.மலேசியாவும், சீனாவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடந்து வருகிறது. தலிபான் ஆட்சியாளர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களாக உள்ளனர். அடுத்த 30 நாட்களுக்குள்ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் செளதியைச் சேர்ந்த பயங்கரவாதி பின் லேடனை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐ.நா. சபை கூறியுள்ளது.

1998 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக மையங்களில் நடந்த குண்டுவெடிப்புச்சம்பவத்தில் தொடர்புடையவர் பின் லேடன் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இச்சம்பவங்களில் 225 பேர் கொல்லப்பட்டனர். 4,000 க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். லேடன், தற்போது ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+