செங்கோட்டையனுக்கு ஜாமீன் கிடைக்குமா?
சென்னை:
அண்ணா போக்குவரத்துக் கழக ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அப்போது அண்ணா போக்குவரத்துக் கழகத்துக்கு பஸ்பாடிகட்டுமானப் பொருட்கள், டிக்கெட் அச்சடித்தல் போன்றவற்றில் ரூ 72 லட்சம் ஊழல் நடந்ததாக அவர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் செங்கோட்டையனுக்கும், அவரது உதவியாளர் எழிலுக்கும் 5 வருடக் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தண்டனையை எதிர்த்தும், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் செங்கோட்டையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். இந்தமனுவிற்கு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications