For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் சர்ச் தேர்கள் தீக்கிரை

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள மைலப்பபுரத்தில் உள்ள கத்தோலிக்கச் சர்ச்சுக்குச் சொந்தமானசர்ச்சில் மரத்தாலான தேர்கள் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தன.

மைலப்பபுரம் சர்ச் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சர்ச்சில் திருவிழா பவனிக்காக 3 மரத் தேர்கள்வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு தேர் கனத்த மரச் சக்கரங்களுடன் கூடிய பெரிய தேர் ஆகும்.

இவை கோவில் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த மரத் தேர்கள்புதன்கிழமை நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்த சிலர் அங்குள்ள மணியை அடித்து, ஊர் மக்களைஎழுப்பினர்.

நள்ளிரவில் ஆலயமணி ஒலிப்பதை கேட்டு ஊர் தலைவர் எல்.ஜெயராஜ் கோவிலுக்கு ஓடி வந்தார். மற்றும் பலர்பதறி அடித்துக் கொண்டு சர்ச்சுக்கு வந்தார்கள். தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.அதற்குள் 2 தேர்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.

இதுபற்றி சிங்கம்பாறை பாதிரியாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் முக்கூடல் போலீசில் புகார் கொடுத்தார்.தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வந்து சம்பவஇடத்தில் இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர். சர்ச்சுகளில் உள்ள தேர்களில் எப்படி தீ விபத்து ஏற்பட்டதுஎன்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X