சோ-ஜெ.சந்திப்பில் ஒன்றுமில்லை .. கருணாநிதி
சென்னை:
துக்ளக் ஆசிரியர் மற்றும் ராஜ்ய சபா எம்.பி.யான சோவை, ஜெயலலிதா சந்தித்துப் பேசியதில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று முதல்வர்கருணாநிதி புதன்கிழமை தெரிவித்தார்.
அவர் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக வை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயேஜெயலலிதா பல செயல்களைச் செய்து வருகிறார்.
திமுக எதிர்ப்புக் கட்சிகளையும், திமுக வில் தற்போதுள்ள கட்சிகளையும் இழுத்து மஹா கூட்டணியை அமைக்கப் போவதாக அவர் கூறி வருகிறார்.
கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்திருந்த சோவை சில தினங்களுக்கு முன்பு அவரது அலுவலகத்துக்கே சென்று பேசினார் ஜெயலலிதா.
இதற்கு முக்கியத்துவம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சந்திப்பின் விளைவு போகப் போகத் தெரியும்.
ஜெயலலிதா அமைக்கவுள்ள மஹா கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணி அமையுமா என்று கேட்கிறார்கள். நாங்கள் எந்தக் கூட்டணிக்கும் எதிராககூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications