For Daily Alerts
Just In
ஜன. 1 முதல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு
சென்னை:
தமிழகத்தில் ஜனவரி 1 ம் தேதி முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதிபுதன்கிழமை தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டம்முடிந்தபின் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வரவிக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 1 ம் நாள் முதல் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு தற்போதுவிற்கப்படும் விலையிலிருந்து 60 பைசா வீதம் விலை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாதம் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு செலவு ஏற்படும். மண்ணெண்ணெய்விலைக்குறைவு பொங்கலுக்கு மட்டுமா என்று கேட்கலாம். பொங்கலையொட்டி இந்த விலைக்குறைப்பைஆரம்பிக்கிறோம். எவ்வளவு காலத்திற்கு இந்த விலைக்குறைப்பு என்பதை பிறகு முடிவு செய்வோம் என்றார்முதல்வர் கருணாநிதி.
Comments
Story first published: Sunday, May 21, 2000, 5:30 [IST]