பெண் கொலை முயற்சி: 4 பேருக்கு சிறைத்தண்டனை
ஈரோடு:
பெண்ணை நிர்வாணப்படுத்தி ஆற்றில் வீசிக் கொலை செய்ய முயன்ற நான்கு பேருக்கு நாமக்கல் நீதிமன்றம் 10ஆண்டுகள் விதித்து தீர்ப்பளித்தது.
நாமக்கல் அருகே உள்ள கொசவபட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (20). இவருக்கும் ஆறுமுகம் என்பவருக்கும்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்ஆறுமுகம் தனது அக்காள் மகளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த ஜெயக்கொடி தனித்து வாழ முடிவெடுத்தார். தனது பிழைப்பிற்காக ஒரு தொழில் ஒன்றைசெய்ய முடிவு செய்தார். எலுமிச்சை வியாபாரம் செய்ய முடிவு செய்து சந்தையில் கடை ஒன்றை பிடித்துவியாபாரத்தை துவக்கினார்.
அப்போது அங்கு வியாபார விஷயமாக வந்து சென்ற தாஜூஹிதீன் (24), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகாதலாக மாறி, தாலிகட்டாமல் குடும்பம் நடத்தத் தொடங்கினார்.
இரண்டாவது வாழ்க்கை வாழ்ந்து வந்த ஜெயக்கொடிக்கு மீண்டும் பிரச்னை உருவானது. தாஜூதீன் வேறு ஒருபெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள டிவு செய்தார்.
எனவே ஜெயக்கொடியை சமாதானப்படுத்த சையத் உசேன், ஜெகன்பாஷா, தாஜூதீன் ஆகியோர் அவரதுவீட்டிற்குச் சென்றனர்.
அங்கு, ஜெயக்கொடியை அழைத்துக் கொண்டு காவிரி ஆற்றுப் படுகை வழியாக வந்து கொண்டிருந்தனர்.அப்போது தாஜூதீனின் உறவினர் கமல்பாட்ஷாவும் வந்தார். நான்கு பேரும் ஆற்றுப் பாலத்தைக் கடக்கும் போதுஜெயக்கொடியை கத்தியால் குத்தினர். அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டனர்.
காயமடைந்த ஜெயக்கொடி, இறந்து விட்டது போல நடித்தார். ஆனால் சந்தேகமடைந்த தாஜூதீன், அவருடன்வந்தவர்கள், ஜெயக்கொடியை நிர்வாணப் படுத்தி கல்லோடு சேர்த்துக் கட்டி ஆற்றில் தள்ளி விட்டு விட்டு ஓடிவிட்டனர்.
அப்போது தண்ணீருக்குள் இருந்த ஜெயக்கொடியை அங்கு மீன்பிடிக்க வந்த சிலர் காப்பாற்றி மருத்துவமனையில்சேர்த்தனர். இதில் ஜெயக்கொடி உயிர் பிழைத்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நான்குபேரையும் கைது செய்தனர்.
நாமக்கல் சப்கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில், ஜெயக்கொடியை நிர்வாணப்படுத்திக் கொலை செய்ய முயன்றநான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஜெயராம் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications