For Daily Alerts
Just In
ஆதிவாசியைக் கொன்ற காட்டெருமை
கோவை:
காட்டெருமை தாக்கி ஆதிவாசி பலியானார். அவரைத் தாக்கிய எருமையும் இறந்து போனது.
கோவை மாவட்டம் வால்பாறையில் வன விலங்குகளுடன் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எஸ்டேட்டுகளில் தங்கிப் பணியாற்றும் இவர்கள்,அடிக்கடி வனவிலங்குகளின் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த எஸ்டேட்டுகளில் கீழ் பூனாச்சி எஸ்டேட் பகுதியில் உள்ள காப்புக் காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் தங்கமுத்து (55). இவருக்கு காது கேட்காது.எனவே, புதன்கிழமை இரவு எஸ்டேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு எருமை அவரைத் தாக்கியது.
இதில் குடல் சரிந்த அவர் பலியானார். அதே சமயம், அந்த எருமையும் அருகில் இறந்து கிடந்தது. இந்த சம்பவ இடத்தைப் போலீசார் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர்.
Comments
Story first published: Sunday, May 21, 2000, 5:30 [IST]