தாதாக்களுடன் தொடர்பு: இந்தி படத் தயாரிப்பாளர் கைது
மும்பை:
சோரி சோரி சுப்கே சுப்கே திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரை குற்றப்பிரிவு போலீசார்கைது செய்துள்ளனர்.
சோரி சோரி சுப்கே சுப்கே என்ற இந்தி திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ரஹீம் கான்அல்லாபக்ஷ் கான், தாதாக்களுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக மும்பை குற்றப்பிரிவுபோலீசாரால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்ததாவது:
ரஹீம் மும்பையின் வடமேற்கு பகுதியின் டி.என். நகரிலிருக்கும் அவருடைய வீட்டில்விசாரணை செய்யப்பட்டார். தனக்கு தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பின் அவர் கைது செயய்ப்பட்டார்.
ரஹீம் மகாராஷ்டிரா அரசால் அமைக்கப்பட்டுள்ள குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில்வியாழக்கிழமையன்று ஆஜர் படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
சோரி சோரி சுப்கே சுப்கே திரைப்படத்தின் தயாரிப்பாளர் நஜீம் ரிஜ்வி இதே குற்றச்சாட்டுகாரணமாக டிசம்பர் மாதம் 13-ம் தேதி கைது செய்யப்பட்டு, தற்போது போலீஸ் காவலில்வைக்கப்பட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.
யு,என்.ஐ.












Click it and Unblock the Notifications