இந்தியன் தாத்தா வுக்கு பதவி உயர்வு
கோவை:
கோவையில் போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய "இந்தியன் தாத்தாசுந்தர்ராஜன், ராஜமாணிக்கம் உட்பட 12 பேர் டி.எஸ்.பி.,யாகப் பதவி உயர்வுபெற்றுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையில் இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றிய 74 பேருக்கு பதவிஉயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவு வெளியாகியுள்ளது.
இதில், கோவை நீலகிரி மாவட்டங்களில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன்,ராஜமாணிக்கம் ஆகியோர் உட்பட 12 பேருக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது.
கோவை மாநகர காட்டூர் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், டி.எஸ்.பி யாகப் பதவி உயர்வுபெற்று மதுரை மதுவிலக்குப் பிரிவிற்குச் செல்கிறார்.
கோவையில் "இந்தியன் தாத்தா என்ற நற்பெயரை இவர் ஈட்டியுள்ளார்.பொதுமக்களிடையே நல்ல பெயர் பெற்ற இவருக்கு தமிழ்ச் சங்கம் பாராட்டிபரிசளித்துள்ளது.
தமிழக வரலாற்றில் ஒரே முறையில் 74 இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.,யாகப் பதவிஉயர்வு பெற்றது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications