ஈரோடு சாலை விபத்தில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
புதுச் சத்திரம் அருகே கார் லாரி மோதிக் கொண்டதில் இருவர் இறந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், கடம்பத்தூர் பட்டியில் பெருமாள் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலுக்குசிலை எடுக்க காரில் இந்த ஊரைச் சேர்ந்த முத்துச்சாமி, வெங்கட்ராமன், சீனிவாசன், திருப்பதி, சுப்ரமணி , மற்றும்டிரைவர்முரளி ஆகியோர் சென்றனர்.
இவர்கள் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எதிரே நெல்பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. புதுச்சத்திரம் என்ற இடத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த டிரைவர் பாலமுரளி மற்றும் பாலசுப்ரமணி ஆகியோர் இறந்தனர். மேலும்நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications