வீரப்பன் விவகாரம்: "விசாரணைக் கமிஷன் தேவை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன் விவகாரம் குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் தலைவர் காமாட்சி நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல்செய்துள்ளார். அவற்றில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜ்குமார் கடத்தலுக்கு பிறகு தமிழகத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தமிழ் என்ற போர்வையில்தீவிரவாத நடவடிக்கை அதிகரித்து வருகிறது. பா.ம.க, ம.தி.மு.க , தமிழர் தேசிய இயக்கம் ஆகிய கட்சிகள் இவற்றுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.

தீவிரவாதிகள் வெப்சைட் அமைக்கும் அளவிற்கு இருக்கின்றது. ஆந்திரா, கர்நாடகம், கேரளா, இலங்கை வடகிழக்கு பகுதி ஆகிய பகுதிகளுடன் தனித்தமிழ்நாடு உருவாக்கப்போவதாக வெப்சைட்டில் கூறியுள்ளது.

காஷ்மீர், பாஞ்சாப் போல தமிழகம் மாறிவருகின்றது. பா.ம.க , ம.தி.மு.க, தமிழர் தேசிய இயக்கம் ஆகிய மூன்று கட்சிகளும் எல்.டி.டி.ஈ மீதானதடையை நீக்க முயற்சி எடுத்து வருகின்றது.

இந்த மூன்று கட்சிகளையும் தடைசெய்யவேண்டும். ராஜ்குமாரை கடத்திய வீரப்பனை அரசியல் வாதிகள் நெருங்க முடிகிறது. ஆனால் போலீஸாரால்நெருங்கமுடியவில்லை.

எனவே வீரப்பன் விவகாரம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தமனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+