செங்கோட்டையன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
அண்ணா போக்குவரத்துக் கழகத்திற்கு பஸ் பாடி கட்டுமானப் பொருட்கள் வாங்கியதில் ரூ 75.42 லட்ச ரூபாய் ஊழல் செய்தது தொடர்பாக 5 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அமைச்சர் செங்கோட்டையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தார். இந்த மனுவை நீதிபதி அக்பர்பாஷா கதிரி விசாரித்தார். பின்னர் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும், ரூ 50, 000 ரொக்கம் மற்றும் இரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்படுவதாகவும்நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் தண்டனை பெற்ற செங்கோட்டையனின் உதவியாளர் எழிலுக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 14 ம் தேதி தனிக்கோர்ட் நீதிபதி தார்வேஷ், செங்கோட்டையன், அவரது உதவியாளர் எழில் ஆகியோருக்கு 5 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை விதித்தார். இவ்வழக்கில் தொடர்புடைய ஏஜன்ட் நடராஜனுக்கு 8 வருட கடுங்காவல் தண்ட ன விதிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications