முதுகை ஒடிக்காத புத்தகம் ..கோவையில் அறிமுகம்
கோவை:
இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடச் சுமையை விட பாடப் புத்தகச் சுமைதான் பெரும் சுமையாகஉள்ளது.
"பை நிரம்பி வழிய புத்தகங்களைச் சுமக்கும் குழந்தைகளின் பாடப் புத்தக சுமையை பெற்றோர்களும்,ஆசிரியர்களும் அன்றாடம் பார்த்துக் கொண்டிருந்தாலும் இதற்குத் தீர்வு காண முயலவே இல்லை. எனவே,இத்தகைய சூழ்நிலையை மாற்ற முன் வந்துள்ளது ஒரு புத்தகப் பதிப்பகம்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாடப் புத்தகங்களைத் தயாரித்து வந்த இந்த நிறுவனம், மெட்ரிகுலேசன்பள்ளிக் குழந்தைகளுக்கு பருவ முறைப்பாடப் புத்தகங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில், ஒரு புத்தகத்தைத்தயாரித்துள்ளது.
ஒரே புத்தகத்தில் முதல் நான்கு மாத காலத்திற்குத் தேவையான அனைத்துப் பாடங்களையும் இதில் இடம் பெறச்செய்துள்ளனர். இப்புத்தகம் முடிந்ததும், அடுத்த கட்டப் பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒரே புத்தகத்தில் கணிதம், சமூக அறிவியல், ஆங்கிலம், சுற்றுச் சூழல் ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.இந்தப் பாடப் புத்தகத்தில், நான்கு மாதப் பாடங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். எனவே நான்கு மாதங்களுக்குஒரு புத்தகத்தை மட்டும் இக் குழந்தைகள் எடுத்துச் சென்றால் போதும்.
இந்த வரிசைப் பாடங்களுக்கு டிஸ்கவரி எனப் பெயரிட்டுள்ளனர். கோவையில் 20 பள்ளிகள் இந்தப்பாடத்திட்டத்தைப் பின்பற்ற ஒப்புக் கொண்டுள்ளன. அடுத்து வரும் கல்வி ஆண்டிலிருந்து இப்புத்தகம் தமிழகம்முழுவதும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என புத்தக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications