வீரப்பன் காட்டுக்குள் ஹெலிபேட் அமைகிறது
கோவை:
வீரப்பனைக் கண்டுபிடிக்க காட்டுப் பகுதியில் 5 ஹெலிகாப்டர் தளங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் எங்குள்ளான் என்பதில் இன்னும் மர்மமே நீடித்து வருகிறது. வீரப்பன் காட்டுக்குள்ஏதாவது ஒரு குகையில் பதுங்கியிருக்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வாறு பதுங்கியிருந்தால்வீரப்பனைப் பிடிப்பது அவ்வளது எளிதான காரியமாக இருக்காது.
காட்டுப் பகுதியில் வீரப்பனின் நடமாட்டமோ, அல்லது அவனது கூட்டாளிகளின் நடமாட்டமோ இருந்தால் தான்போதுமான தடயங்களோ, போதுமான அடையாளங்களோ கிடைக்கும்.
எனவே புரியாத புதிராக உள்ள தேடுதல் வேட்டையில், ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அதிரடிப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு உதவவும் அவர்களைக் கண்காணிக்கவும் இந்தஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. அடர்ந்த காட்டுக்குள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள பல நவீனவசதிகள் இதில் உள்ளன.
ஹெலிகாப்டர் வந்திறங்க பிரத்தியோகமான சிமென்ட் தளம் எதுவும் தேவையில்லை. எனவே குறிப்பிட்ட சமவெளி உள்ள இடங்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒகனேக்கல், அஞ்செட்டி,கொளத்தூர், ஏரியூர், ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் மற்றும் இதனையொட்டியுள்ள மலைப்பகுதிகளில் வீரப்பனைத் தேடி அதிரடிப்படையினர்குவிக்கப்பட்டுள்ளனர். போதுமான நம்பகமான தகவல்கள் கிடைக்காததால் இன்னும் அதிரடிப்படையினர்குழப்பமாகவே வலம் வருகின்றனர்.