For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை மோதலில் 52 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், இலங்கை ராணுவ வீரர்கள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 52 பேர்பலியானார்கள்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், யாழ்ப்பாணத்திலுள்ள கைத்தடி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள், புலிகள் மீதுதாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 30 விடுதலைப்புலிகளும், 22 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். 47 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்என்றார்.

முன்னதாக, 24 ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு சண்டை நிறுத்தம் செய்யப்போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். ஆனால் அதை இலங்கை அரசுநிராகரித்து விட்டது.

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளதை, இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து அமைச்சர்பீட்டர் ஹெய்ன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை ராணுவ வீரர்கள், புலிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் இலங்கையில், புலிகள், சண்டை நிறுத்தம் குறித்து இலங்கை அரசுக்குத்தெரிவிப்பதற்கு முன்பே பொதுமக்களுக்குத் தெரிவித்து விட்டதாக குறைபட்டுள்ளார்.

ராணுவத் தரப்பில் கூறுகையில், புலிகளின் சண்டை நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். சண்டை நிறுத்தத்தை வரவேற்பது குறித்து இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X