நகைக் கடை அதிபர் குடும்பத்துடன் தற்கொலை
கோவை:
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன் தொல்லையால், நகைப்பட்டறை அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், கொடுங்கலூரைச் சேர்ந்தவர் கண்ணன் (45). இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இருவருக்கும் ராஜேஷ் (14), முருகன் (10),தேவி (12) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
கண்ணன் கோவையில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வந்தார். ஆனால், சில நாட்களில் தொழில் கடும் பாதிப்பிற்குள்ளானது. இந்த தொழில் நஷ்டத்தால்,குடும்பம் நடத்த கஷ்டப்பட்டார். எனவே, அருகில் இருந்த நகைக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.
ஆனால் பெற்ற கடனைக் கட்ட முடியவில்லை. கடன் தொல்லையால் தினம் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 5 பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.
டிசம்பர் 21ம் தேதி இரவு கண்ணன் மதுக் குடித்தார். பின்னர் பால் வாங்கி வந்து அதில் சயனைடைக் கலந்தார். அந்த பாலுடன் ரொட்டியை கலந்துகுழந்தைகளுக்கு கொடுத்தார். பின்னர் பாலை தானும் குடித்து விட்டு மனைவிக்கும் கொடுத்தார்.
இதில், அனைவரும் இறந்து போயினர். காலை வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள்பார்த்தனர்.
அப்போது அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆனால் அவர்கள் இறந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு போலீசில் புகார்செய்தனர்.
போலீசார் கதவைத் திறந்து குடும்பத்துடன் இறந்து கிடந்த 5 பேரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications