For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் காட்டுக்குள் ஒரு துப்பாக்கிச் சூடு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுட்டவர்கள்வீரப்பன் கூட்டாளிகளாக என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை ஆனைகட்டியில் துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன் ஒருவர் காணப்பட்டார். இவரை அதிரடிப்படையினர் மற்றும் உளவுப் பிரிவினர் எடுத்து வந்துகோவை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதுடன், தீவிர விசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

கோவை - கேரள எல்லைப் பகுதியில் வசித்து வருபவர் மருதன். இவரின் கை, கால், தொடைப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த காயங்களுடன்பிடிபட்டார். அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையின்போது இந்தக் காயங்களுடன் இருந்தவரிடம், போலீசார் விசாரணை செய்தனர்.

மலையோரக் கிராமத்தில் இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது நிலத்தில் சோளம் மற்றும் அவரை சாகுபடி செய்துள்ளார். இந்த நிலத்திற்கு அடிக்கடிகாட்டு விலங்குகள் வருவதால் இதனைத் தடுக்க நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தாராம். இந்த துப்பாக்கியை இவரது அண்ணன் தவறுதாலாக எடுத்துகையாண்டாராம். அப்போது மருதனின் உடலில் குண்டுகள் பாய்ந்ததாகக் கூறுகிறார்.

ஆனால், போலீசார் இந்தக் கதையை நம்ப மறுக்கின்றனர். இவரது உடலில் உள்ள காயங்கள் வீரப்பன் கூட்டாளிகள் யாராவது இவரைசுட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனவே, இவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு இவருக்குப்போடப்பட்டுள்ளது. உளவுத் துறை நிபுணர்கள் இவரிடம் வீரப்பன் குறித்த தகவல்கள் ஏதேனும் கிடைக்குமா என துருவித் துருவி விசாரணை செய்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X