For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பிக் வழக்கு: ஜெ. கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்பனை செய்த வழக்கில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதா வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தனி நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசுக்கு சொந்தமான டிட்கோ நிறுவனத்திடமிருந்த ஸ்பிக் பங்குகளை மீண்டும்ஸ்பிக் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ 28 கோடியே 99 லட்சம்இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் தொழில்துறைசெயலாளர் ராமச்சந்திரன், தொழிலதிபர் ஏ.சி. முத்தையா ஆகியோர் மீது முதலாவதுதனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ராமச்சந்திரனும், முத்தையாவும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு மனு தாக்கல்செய்தனர். இதை எதிர்த்து அரசு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசு தரப்பு ஆவணங்களில் அடிப்படை முகாந்திரம் காணப்படுவதால் ஏ.சி.முத்தையாவை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது. எனவே அவரது மனுவைதள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, ராமச்சந்திரன், முத்தையா ஆகியமுவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X