மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி?
டெல்லி:
மணிப்பூரில் இந்த வார இறுதிக்குள் ஆட்சி கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சிஅமல்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
அரசியல் நெருக்கடி காரணமாக அம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்குசீர்குலைந்திருப்பதாலும், மாநிலத்திற்குள் தீவிரவாதிகள் அட்டாகாசம்அதிகரித்திருப்பதாலும் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருப்பதால், அது முடிந்தவுடன்(வெள்ளிக்கிழமை முடிகிறது) மணிப்பூரில் ஆட்சிக் கலைப்பு உத்தரவுபிறப்பிக்கப்படலாம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது ஆட்சிக் கலைப்பைஅமல்படுத்தினால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும் என்பதால்கூட்டம் முடிந்ததும் ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.
இந்த வாரத் துவக்கத்தில், மத்திய உற்துறை அமைச்சர் அத்வானி கூறுகையில்,மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனும், அத்வானி பேசினார்.நாடாளுமன்றத்தில் ஆட்சிக் கலைப்புக்கு ஒப்புதல் வாங்க வேண்டுமானால்,காங்கிரஸின் ஆதரவு முக்கியமானது. ராஜ்யசபையில் காங்கிரஸ் கட்சிக்குத்தான்பெரும்பான்மை பலம் உள்ளது.
இதற்கிடையே, டெல்லியில் வியாழக்கிழமை அத்வானியைச் சந்தித்த மணிப்பூர்கவர்னர் வேத் மார்வா, மாநில நிலைமை குறித்து எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில்,பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராணுவத் தளபதி சுந்தரராஜன்பத்மநாபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.