இந்தியா உதவ கோருகிறார் அராபத்
டெல்லி:
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேவின் வன்முறையால் ஏற்பட்டுள்ள பதட்டத்தை குறைக்க இந்தியா உதவவேண்டும் என்று பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்
கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலஸ்தீன தவைர் யாசர் அராபத், பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடித்த்தில், இந்திய அரசு பாலஸ்தீனவிவகாரத்தில் பிராந்திய அளவிலும், சர்வ தேச அளவிலும் பங்காற்றி பதட்டத்தை தணிக்க உதவ வேண்டும் எனகேட்டுக் கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன் பிரதமர் வாஜ்பாய், அராபத்துக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் பாலஸ்தீன தலைவர்அடிக்கடி இந்தியா, பாலஸ்தின விஷயத்தில அக்கறை காட்ட வேண்டும் என கூறி வருவதன் காரணத்தையும், முழுவிவரத்தையும் கேட்டிருந்தார். தற்போது அராபத் எழுதியுள்ள கடிதம் பிரதமரின் கடிதத்திற்கு பதில் கடிதமாகும்.
வாஜ்பாயின் கடிதம் இந்திய வெளியறவுத்துறை செயலாளர் ராஜன் இந்த மாத துவக்கத்தில் காசா நகருக்குச்சென்றிருந்த போது அராபத்திடம் கொடுக்கப்பட்டது.
அமெரிக்க செனட் உறுப்பினர் ஜார்ஜ் மிட்சேல் தலைமையிலான குழு இஸ்ரேலில் நிலவி வ ரும அரசியல்ஸ்திரத்ன்மையின்மையின் காரணமாக எநத நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
இந்தக் குழுவுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அராபத் கூறியுள்ளார்.
டெல்லியில் இந்திய அதிகாரிகள் இது குறித்து கருத்து கூறுகையில், இந்தியா இரு நாடுகளுக்கு இடையேநல்லுறவை ஏற்படுத்த முயற்சி எடுக்க தயாராக உள்ளது. மேலும் தற்போது நடந்து வரும் வன்முறை யை முடிவுக்குகொண்டு வந்து அமைதியை ஏற்படுத்த முயலும். ஆனால் அதற்கு இரு நாடுகளும் ஒததுழைத்தாலே அதுசாத்தியப்படும் என தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications