தி.க.சி.க்கு சாகித்ய அகாடமி விருது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர் தி.க.சிவசங்கரன் உள்பட 21 பேருக்கு சாகித்யஅகாடமி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இது பற்றி சாகித்ய அகாடமி செயலாளர் சச்சிதானந்தன் கூறுகையில், இந்த ஆண்டுக்கானசாகித்ய அகாடமி விருதுகளில் கவிதைகள்தான் முதலிடம் வகிக்கின்றன.
8 கவிஞர்களுக்கும், 6 சிறுகதை எழுத்தாளர்களுக்கும், 3 நாவலாசிரியர்களுக்கும், 2இலக்கிய விமர்சகர்களுக்கும், நாவல் மற்றும் கட்டுரை ஆசிரியர்கள் இருவருக்கும் சாகித்யஅகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரமும், பட்டயமும் வழங்கப்படும்.விருதுகள் பிப்ரவரி மாதம் 20-ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் எனகூறினார்.
தமிழிலில், தி.க.சிவசங்கரன் விருது பெறுகிறார். நெல்லை மாவட்டத்துக்காரரான தி.க.சி.சிறந்த விமர்சகராவார்.












Click it and Unblock the Notifications