For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குளிரில் உயிர் விடும் ஒரிசா பறவைகள்

By Staff
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்:

ஒரிசா மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிரால் ஆயிரர்கணக்கான பறவைகளும், மீன்களும் இறந்து வருகின்றனஎன அதிகாரிகள் தெரிவிததனர்.

குளிர் காலம் தொடங்கியது முதல் நாட்டின் பல பகுதிகளிலும் கடும் குளிர் பாதித்து வருகிறது. அதற்கு ஒரிசாவும்விதிவிலக்கல்ல. அங்கு நிலவி வரும் கடும் குளிரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பறவைகளும், மீன்களும்இறந்து விட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:

குளிர் அதிகமாக இருப்பதால் பறவைகள் அதிக அளவில் இறந்துள்ளன. குறிப்பாக காடுகளால் சூழப்பட்ட மலைப்பகுதிகளில்தான் அதிக அளவில் பறவைகள் இறந்துள்ளன. இது தவிர குளங்களில் உள்ள மீன்களும் இறந்துவருகின்றன.

பறவைகள், மலை பகுதிகள் சூழ்ந்துள்ள கான்டமால் மற்றும் போத் மாவட்டங்களில்தான் அதிக அளவில்இறந்துள்ளன. இந்த பகுதிகளில் இருக்கும் வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியசுக்கும் குறைவாக உள்ளது. இந்தகுளிரை தாங்க முடியாமல் பறவைகள் இறந்து விடுகின்றன என கூறினர்.

இந்த பகுதிகளில் வாழும் மக்கள் குளிருக்கு பயந்து காலை 10 மணிக்கு மேல்தான் வீட்டை விட்டு வெளியேவருகிறார்கள். அதே போல் மாலை பொழுது சாயும் முன் வீட்டிற்குள் சென்று விடுகிறார்கள்.

ஒரிசாவின் டார்ஜிலிங் என அழைக்கப்படும் தாரிங்பாடியில் உள்ள வீடுகளின் கூரைகளில் அதிகாலையில்பனிக்கட்டிகள் காணப்படுகிறது அங்கு அந்த அளவுக்கு குளிர் கடுமைய்ாக உள்ளது.

குளிரிலிருந்து தப்பிக்க மக்கள் காலை நேரங்களிலேயே சாலையோரங்களில் தீமூட்டி குளர்காய்கிறார்கள்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X