மூலிகை பெட்ரோல்: காப்புரிமையை விற்றார் ராமர்
சென்னை:
மூலிகைப் பெட்ரோல் தயாரித்ததாகக் கூறி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டராமர் பிள்ளை, அந்த பெட்ரோலைத் தயாரிப்பதற்கான காப்புரிமையை, ராஷ்ட்ரியசுயம் சேவைக் அமைப்பிடம் கொடுத்துள்ளார்.
மூலிகைச் சாறிலிருந்து பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி வந்தார் ராமர் பிள்ளை. அவரதுபெட்ரோல், உண்மையிலேயே பெட்ரோல்தானா என்று பல்வேறு இடங்களில்பரிசோதிக்கப்பட்டது. இறுதியில் அது போலி பெட்ரோல் என கண்டுபிடிக்கப்பட்டது.இருந்தாலும் தொடர்ந்து தனது கண்டுபிடிப்பை நியாயப்படுத்தி வந்தார் ராமர் பிள்ளை.இறுதியில், அதை உற்பத்தி செய்து விற்கவும் ஆரம்பித்தார். இந்த நிலையில் அவரைசி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.
இந்த நிலையில், தனது மூலிகை பெட்ரோலுக்கான காப்புரிமையை சென்னை மாவட்டஆர்.எஸ்.எஸ். தலைவர் சம்பத்குமாரிடம் ஒப்படைத்துள்ளார் ராமர்.பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. சம்பத்குமார்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சம்பத்குமார் கூறுகையில், ராமர் பிள்ளையின் பெட்ரோல், உண்மையானபெட்ரோலை விட சக்தி வாய்ந்தது. அதிக தூரத்திற்கு இது வாகனங்களைஇயக்கவல்லது.
தேச நலன் கருதி இந்த பெட்ரோல் தயாரிக்கும் காப்புரிமையை எங்கள் இயக்கம்வாங்கியுள்ளது. பணம் பார்ப்பதற்காக இதை ஆர்.எஸ்.எஸ். செய்யவில்லை.
இதை வாங்கவும், விற்கவும் மூன்று நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவற்றில் ஒன்றுஅமெரிக்காவைச் சேர்ந்தது. மற்ற நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.
தற்போது ராமர் பிள்ளை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்துள்ளார். அவரதுபெட்ரோலை விற்பது தொடர்பாக தேசிய அளவில் முடிவு எடுக்கப்பட்டு நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மட்டுமே எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து அதை வாங்கமுன்வந்தது. எனவேதான் அதனிடம் இந்த பெட்ரோல் தயாரிப்புக்கானகாப்புரிமையைக் கொடுத்தேன் என்று ராமர் பிள்ளை கூறியுள்ளார்.