மண் சரிவில் சிக்கி 3 சிறுமிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மண் சரிவில் சிக்கி 3 சிறுமிகள் மூச்சுத் திணறி இறந்தனர்.
வடசிறுவளூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். அந்தப் பகுதியில் உள்ள மண் மேட்டின் மீது ஏறி ஒருசிறுவன், 4 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து அவர்கள் மீது விழுந்தது.
மண் சரிவில் சிக்கிய ஜெயந்தி (12), லட்சுமி (12) ஆகியோர் அங்கேயே மூச்சுத் திணறி இறந்தனர். மயக்கமடைந்தநிலையில் மகேஸ்வரி (13) என்ற சிறுமி மீட்கப்பட்டார். அவரை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மகேஸ்வரி இறந்தார்.
ராஜீவ் காந்தி, ஜோதிலட்சுமி ஆகியோர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications