துங்கார்ப்பூருடன் மோதல் .. விலகினார் கவாஸ்கர்
மும்பை:
தேசிய கிரிக்கெட் அகாதமியின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் முன்னாள்கேப்டன் சுனில் கவாஸ்கர்.
அகாதமி தலைவர் துங்கார்பூருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவாஸ்கர்ராஜினாமா முடிவுக்கு வந்தார்.
பெங்களூரில் அமைக்கப்பட்ட அகாதமியின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வாரியத்தலைவர் ராஜ் சிங் துங்கார்பூர் தலைவராக இருந்து வருகிறார். அகாதமியின்ஆலோசகராக கவாஸ்கர் இருந்து வ ந்தார்.
சமீபத்தில் ஜிம்பாப்வே அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.அப்போது, ஜிம்பாப்வே அணியும், தேசிய கிரிக்கெட் அகாதமி அணியும் ஒருபயிற்சிப் போட்டியில் மோதின. இதுகுறித்து துங்கார்பூருக்கும், கவாஸ்கருக்கும்மோதல் வெடித்தது.
இந்திய அணியில் இடம் பெறும் கனவுடன் உள்ள வீரர்களைக் கொண்ட அணியுடன்ஜிம்பாப்வே அணியை மோத விட்டிருக்க வேண்டும் என்று கவாஸ்கர் கூறியிருந்தார்.இதற்கு துங்கார்பூர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கவாஸ்கர் போன்றவர்கள்அகாதமிக்குத் தேவையில்லை என்ற ரீதியில் அவர் அறிக்கை விட்டார்.
துங்கார்ப்பூரின் அறிக்கையால் கோபமுற்ற கவாஸ்கர் உடனடியாக தனது ராஜினாமாகடிதத்தைக் கொடுத்து விட்டார். மும்பையில் நடந்த அகாதமி கூட்டத்திற்கு வந்தகவாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.
கவாஸ்கர் ராஜினாமாவை துங்கார்ப்பூரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.கவாஸ்கர் ஒன்றும் பெரிய கிரிக்கெட் வீரர் இல்லை. 60 ஓவர்கள் விளையாடி 30 ரன்கள்எடுத்தவர்தான் கவாஸ்கர். இதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லைஎன்று கூறியுள்ளார்.