ஈரோட்டில் மென்பொருள் பூங்கா அமைக்க கோரிக்கை
ஈரோடு:
ஈரோட்டில் மென்பொருள் பூங்கா அமைக்க வேண்டும் என கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை தீர்மானம்நிறைவேற்றியது.
ஈரோட்டில் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் சார்பில் பேரணி மற்றும் 5 வது மாநில மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கொங்கு வேளாளக் கவுண்டர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கும் சட்டத்தை நீக்கி,அனைவருக்கும் சம நீதி வழங்கும் வகையில் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும்.
விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பாண்டியாறு புன்னம்புழாத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றவேண்டும்.
கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் நிலத்தை ஜப்தி செய்யக் கூடாது. விவசாயத்தை தொழிலாக அங்கீகரிக்கவேண்டும். சாயக் கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஈரோட்டில்மென்பொருள் பூங்கா ஒன்றை நிறுவ வேண்டும்.
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரியாகக் கணக் கெடுப்பு நடத்த வேண்டும்.
ஈரோட்டைத் தலைமையகமாகக் கொண்டு, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கு தனி ரயில்வேடிவிஷன் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications