மானிய விலையில் நூல்களை விற்க ஜெ.கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் உள்ள நெசவுத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் நூல்களைக் விற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மானிய விலையில் நூல்கள் கொடுக்கப்படுவதில்லை. இதனால் லட்சக்கணக்கான நெசவுத்தொழிலாளர்கள் கஷ்டப்படுகின்றனர். மிக அதிகமான விலையினால் நூல்களை வாங்கக் கூட முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர்.
மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக சில மாதங்களுக்கு முன் நூலின் விலை ரூ 400 லிருந்து 500 ஆக உயர்ந்தது. இதனால் நெசவுத்தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல கூட்டுறவு மில்களை மூட முதல்வர் கருணாநிதி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதனால் பல மில் தொழிலாளர்கள்பாதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் நூல்களின் விலையேற்றத்தைக் குறைக்க வேண்டும். இது குறித்து நெசவுத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியும் முதல்வர் கருணாநிதி அதுகுறித்துக் கண்டு கொள்ளவேயில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications