சிலைகள் உடைப்பை கண்டிக்கிறார் சங்கரய்யா
சென்னை:
ஈரோடு மற்றும் நெல்லை மாவட்டங்களில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சங்கரய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மற்றும் நெல்லை மாவட்டங்களில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. விநாயகர்சிலைக்கு செருப்பு மாலையும் போடப்பட்டது. இந்த செயலை கண்டித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சங்கரய்யா வெளியிட்டுள்ள அறிகையில்கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. ஈரோடுமாவட்டம் தாராபுரத்தில் அண்ணாநகரில் கோயிலுக்குள் புகுந்த கும்பல் சாமி சிலைகளைஉடைத்துள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவங்களை கட்சியின்மாநில செயற்குழு கடுமையாக கண்டிக்கிறது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழகஅரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications