கொலையான தமிழர்களின் கழுத்தில் காயம் கண்டுபிடிப்பு
கொழும்பு:
இலங்கையில் உள்ள மிர்சுவில்லில் ராணுவ வீரர்களால் கொலை செய்யப்பட்ட 8 தமிழர்களின் கழுத்துக்களில் ஆழமான காயங்கள் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் டிசம்பர் 19 ம் தேதி மிர்சுவில் கிராமத்துக்குச் சென்ற 8 பேரைக் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் போலீஸில் புகார்கொடுத்திருந்தனர். இதற்கிடையே கிறிஸ்துமஸ் தினத்தன்று காணாமல் போன 8 தமிழர்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இறந்தவர்களில் மூன்று பேர்ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கொலை தொடர்பாக 8 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ராணுவ அதிகாரி. இந்தக் கொலை மிகவும்கொடூரமாக நடந்துள்ளது என்று போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர் மிகவும் அழுகிய நிலையில் இருந்த தமிழர்களின் சடலங்களின் பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் இன்னும் அதிகமான தமிழர்களின் பிணங்கள் கண்டு பிடிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இறந்த தமிழர் ஒருவரின் மனைவி ஜேசுதா கூறுகையில், நாங்கள் தெய்வக்குளசிங்கத்தைச் சேர்ந்தவர்கள். என் கணவர் மிர்சுவில்லுக்குச் சென்றார். அவர் ஒருவாரமாகத் திரும்பிவரவில்லை. அவரைக் காணவில்லை என்று போலீஸாருக்குத் தகவல்கள் கொடுக்கப்பட்டது. இறுதியில் அவரது சடலத்தைத்தான்கண்டு பிடிக்க முடிந்தது என்றார்.
தற்போது இந்தச் சம்பவம் குறித்து, ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையேகண்டுபிடிக்கப்பட்ட 8 பேரின் கழுத்துக்களில் ஆழமான காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் 8 பேர் கொலையில் நாளுக்குநாள் திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications