ஈழத்தை ஆதரிப்போம் .. ராமதாஸ் கூறுகிறார்
சென்னை:
தனி ஈழத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கும் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
பா.ம.க.வின் 225 வது அரசியல் சட்டமன்ற தொகுதி மாநாடு சென்னை சைதாப்பேட்டையில் நடந்தது.
மாநாட்டில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், பா.ம.க. இதுவரை யாரையும் தேடிப்போகவில்லை. 1998 ம் ஆண்டு கூட்டணி நம்மைத் தேடி வந்தது.தற்போது 8 இடங்களில் போட்டியிட்டு 5 எம்.பி.தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளோம்.
இன்று 100 கோடி மக்களை ஆட்சி செய்யும் கட்சிகளில் பா.ம.க.வும் உண்டு. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளேன். 225 தொகுதிமக்களின் மனநிலையையும் புரிந்து வந்துள்ளேன். அவர்கள் பா.ம.க.வை விரும்புகிறார்கள்.
இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். அதோடு கல்வியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இதுதான்பா.ம.க.வின் குறிக்கோள்.
ஈழத்தமிழர் பிரச்சனையில் பாட்டாளி மக்கள் கட்சியின் குறிக்கோளில் மாற்றம் இல்லை. விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி அளித்து, ஆயுதங்கள் வழங்கியதுஇந்திராகாந்திதான்.
மதுரையில் டெசோ அமைப்பின் (தமிழ் ஈழ மக்கள் பாதுகாப்பு) சார்பில் நடந்த மாநாட்டில் வாஜ்ாய் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார்.எனவே, இலங்கை அதிபர் சந்திரிகா, விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் வாஜ்பாய் வலியுறுத்த வேண்டும்.
தேர்தலில் அதிக ஒதுக்கீடு கேட்டோ மற்ற விஷயங்களிலோ ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications