நாங்கள் வெப்சைட் துவக்கவில்லை .. மாறன்
சென்னை:
அகண்ட தமிழகம் என்ற பெயரில் வெப்சைட் ஏதும் துவக்கவில்லை என்று வீரப்பனுடன் காட்டில்மறைந்திருப்பதாகக் கூறப்படும் தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பின் தலைவர் மாறன் கூறியுள்ளார்.
அகண்ட தமிழகம் என்ற பெயரில் தமிழ்நாடு விடுதலைப் படை உள்பட பல தமிழ்த் தீவிரவாத அமைப்புகள்வெப்சைட் துவக்கியிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. லோக்சபா வரை இது எதிரொலித்தது.
இந்த நிலையில் தங்களிடம் அப்படி ஒரு எண்ணமே இல்லை, வெப்சைட் ஏதும் துவக்கவில்லை என்று மாறன்கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது:
எங்கள் அமைப்பு சார்பில் வெப்சைட் ஏதும் துவக்கப்படவில்லை. இது மக்களைக் குழப்புவதற்காக யாரோ சிலர்செய்துள்ள வேலை. இந்த வெப்சைட்டிற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. கர்நாடகா, ஆந்திரா, கேரளத்தின் பலபகுதிகளை இணைத்து அகண்ட தமிழகம் அமைப்போம் என்று நாங்கள் எப்போதுமே கூறவில்லை.
அந்தந்த மாநில மக்களுடன் தமிழர்களும் இணைந்து வாழவே ஆசைப்படுகிறோம். அந்தந்த மாநில இன மக்கள்தங்கள் உரிமைகளை அடைவதற்குப் போராடவே நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம்.
இந்த வெப்சைட் எங்களுடையதல்ல. எங்களுடைய அமைப்புக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவைக்குலைப்பதற்காகவே திட்டமிட்ட சதிதான் இந்த வெப்சைட் குழப்பம். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுஎங்களையும், எங்களது முயற்சியையும் அவமானப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார் மாறன்.












Click it and Unblock the Notifications