உண்மையான புத்தாயிரம் ஆண்டு எப்போது?
மும்பை:
புத்தாயிரமாண்டு 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியா அல்லது 2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
தற்போது 2000 ஜனவரி 1-ம் தேதி தான் புத்தாயிரம் ஆண்டின் துவக்கம் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என மனோகர் ஆர். புத்ரான் என்ற கணிதவல்லுநர் தெரிவித்துள்ளார்.
புத்ரான் எழுதிய டைம் தி சைக்கிள் செவன் என்ற புத்தகத்தில் இது குறித்து விரிவாக விவரித்துள்ளார். புத்தாயிரம் குறித்த சர்ச்சை 18-ம் நூற்றாண்டேதுவங்கி விட்டது. 17-ம் நூற்றாண்டிலேயே மேற்கத்திய நாடுகளில் வாழந்த மக்கள் தினசரி தேவைகளுக்காக காலண்டர்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
கடிகாரங்களும், கை கடிகாரங்களும் மக்களின் தினசரி வாழ்க்கையில் பயன் படுத்தப்படுத்தப்பட்டன.
ஒருவரின் பிறந்த வருடத்தைக் குறிக்கக் கூடிய பிறந்தநாள் விழாக்களும் அப்போதே கொண்டாடப்பட்டு வந்தன. 18-ம் நூற்றாண்டின் இறுதியில்அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் ஒருவருக்கு ஒருவர் நூற்றாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
புது நூற்றாண்டு குறித்த சர்ச்சை அப்போதே துவங்கியது. சிலர் 1700-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை புதிய நூற்றாண்டாக கொண்டாடினர். வேறு சிலர் அடுத்தஆண்டு கொண்டாடினர்.
புத்தாயிரம் ஆண்டு குறித்த சர்ச்சை எழக் காரணம் அன்னோ டோமினியை (ஏடி- கிபி) உருவாக்கிய டையோனிசியஸ் எசிகுஸ் முதல் கிபி நுற்றாண்டை 0-என்பதை (பூஜ்யத்தை) பயனபடுத்த தெரியாமல் கிபி 0 என்று துவக்காமல் கிபி 1என துவக்கியதுதான் என தன் புத்தகத்தில் விவரித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications