கேஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகரில் குடோனில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 லாரி டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இன்னொருவர்காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேட்டூர் ராம்நகரில் கெம்பிளாஸ்ட் 2 வது தொழிற்சாலை எதிரில் சக்தி கேஸ் சர்வீஸ் இயங்கி வருகிறது. இது பாலசுப்ரமணியம் என்பவருக்குச்சொந்தமானதாகும்.
இங்கு சமையல் கேஸ் விநியோகம் செய்யப்படும். இங்குள்ள குடோனில் சிலிண்டர்கள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் பழுதடைந்த சிலிண்டரை ஊழியர்ஒருவர் சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இன்னொரு சிலிண்டர் திடீரென்று வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
அப்போது குடோனுக்கு வெளியே நின்று கொண்டிருந்த தலைவாசலைச் சேர்ந்த மனோகரன் (30), குஞ்சாண்டியூரைச் சேர்ந்த முருகன் (30) ஆகிய 2 பேரும்தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். இறந்த முருகனும், மனோகரனும் லாரி டிரைவர்கள்.
இவர்கள் இருவரும் குடோனின் எதிரேயுள்ள கெம்பிளாஸ்ட் நிறுவனத்திற்கு பொருட்களை இறக்க வந்தனர். இந்த விபத்தில் கெம்பிளாஸ்ட் ஊழியர் பங்காருபலத்த தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் கேள்விப்பட்டதும் சக்தி கேஸ் சர்வீஸ் உரிமையாளர்பாலசுப்ரமணியம் தலைமறைவாகி விட்டார்.












Click it and Unblock the Notifications