தமிழகத்தில் உற்சாக கிறிஸ்துமஸ்
சென்னை:
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் திங்கள்கிழமையன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் இயேசுபிரானின் பிறந்தநாளைக் கொண்டாடும் பண்டிகையாகும்.
இயேசு பிரான் நள்ளிரவில் பிறந்தார் என கூறப்படுவதால், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமைநள்ளிரவு புத்தாடை அணிந்து கிறிஸ்துவ தேவாலயங்களில் பிரார்த்தனைக்காக கூடினர்.
கிறிஸ்துவ தேவாலயங்கள் விளக்குள், வண்ண வண்ண பலூன்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.கிறிஸ்தவர்கள் வீடுகளிலும்,ம் கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவப் பொம்மைகளுடன் பரிசுப்பொருட்களுடன் வைக்க்ப்பட்டிருந்தன.
கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துவ தேவாலயங்களிலும் பல 5 நட்சத்திர ஓட்டல்களிலும், கிளப்களிலும்அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களுக்கும், தங்கள் நண்பர்களுககும், வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும்பாகுபாடின்றி கேக் மற்றும் இனிப்பு பொருட்கள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
அனாதை இல்லம் மற்றும் பல இடங்களில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளும் தங்களுடன் இருப்பவர்ரகளுக்குதுணி, பரிசுப் பொருட்களை பரி மாறி கிறிஸ்துமசை கொண்டாடினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications