இம்ரான்கான் குடும்பத்தினர் சென்ற விமானத்தில் தாக்குதல்
லண்டன்:
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் குடும்பத்தினர் பயணம் செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானத்தில் மனநோயாளியான சகபயணி தாக்குதல் நடத்தினார்.
இம்ரான் கானின் மனைவி ஜெமிமா, தாய், சகோதரர், குழந்தைகள் ஆகியோர் விடுமுறையைக் கழிப்பதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில்,லண்டனிலிருந்து கென்யா சென்று கொண்டிருந்தனர். விமானம் சூடான் நாட்டின் மீது பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இருந்த பயணி ஒருவர்,விமானியின் அறைக்குள் நுழைய முயன்றார். மேலும் தாக்குதலிலும் அவர் ஈடுபட்டார்.
இதைப் பார்த்த, இம்ரான் கான் மனைவி, மகன்கள் காசிம், சுலைமான் ஆகியோரும் பிற பயணிகளும், பயத்தில் கூச்சலிட்டனர். இதையடுத்துவிமானத்தை செலுத்திக் கொண்டிருந்த பைலட் வில்லியம் ஹாகன், துணை பைலட் ரிச்சர்ட் வெப் ஆகியோர் அந்த பயணியை கட்டுப்படுத்த முயன்றனர்.
சிறிது நேர மல்லுக்கட்டுக்குப் பிறகு பயணிகள் சிலரின் துணையுடன் அந்த நபர் கட்டுப்படுத்தப்பட்டார். அவர் மன நோயாளி என்று தெரிவிக்கப்பட்டது. இந்தவிமானத்தில், பாப் பாடகர் பிரையன் பெர்ரி உள்பட 379 பேர் பயணம் செய்தனர்.
விமானம் வியாழக்கிழமை இரவு லண்டனிலிருந்து புறப்பட்டது. மன நோயாளியின் குழப்பத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை பத்திரமாக கென்யாதலைநகர் நைரோபியில் தரையிறங்கியது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications