விநாயகர் கோவில் நிலம் அபகரிப்பு .. விசாரிக்கக் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சித்தி விநாயகர் கோவில் நிலம் அபகரிப்பு, காதி போர்டு மற்றும் கூட்டுறவு பால்பண்ணையில் நடந்த ஊழல் குறித்து புலன் விசாரணை நடத்தமுதல்வர் சண்முகம் உத்தரவிட வேண்டும் என்று பாண்டிச்சேரி மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முருகன் நிருபர்களிடம் கூறுகையில், கோவில் நிலம் அபகரிப்பு மற்றும் பிற ஊழல்களில் போதுமானஅளவு சாட்சியங்கள் இருந்தும் அரசு இந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தயக்கம் காட்டுவது ஏன் என்பது எனக்குப் புரியாத புதிராக உள்ளது.
வெள்ளிக்கிழமை முதல்வர் சண்முகத்தைச் சந்தித்து அங்கீகரிக்கப்படாத பிரிவினருக்காக நலவாரியம் அமைத்தல், புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குநிவாரணம் வழங்குதல் உள்பட பல விஷயங்கள் குறித்து தெளிவாக விளக்கிக் கூறினேன்.
அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் இந்த விஷயங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதாக முதல்வர் சண்முகம் ஒப்புதல் அளித்துள்ளார் என்றார் முருகன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications