தெலுங்கை 2-வது ஆட்சி மொழியாக்கக் கோரிக்கை
சென்னை:
தமிழகத்தின் 2 வது மொழியாகத் தெலுங்கு மொழியை அறிவிக்க வேண்டும் என்று திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழக தலைவர் காமாட்சி நாயுடுசனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் தெலுங்கு பேசும் மக்கள். சென்னையில்மட்டும் 50 சதவீதம் பேர் தெலுங்கு மொழி பேசுபவர்கள். இதனால் தெலுங்கு மொழியை இரண்டாவது மொழியாக மாநில அரசு அறிவிக்கவேண்டும்.
தெலுங்கு மொழி, கலை கலாச்சார வளர்ச்சிக்காக தெலுங்கு அகாடமி அமைக்க மாநில அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் உருது மொழி பேசும்மக்கள் இரண்டு சதவீதத்துக்கும் குறைவாக இருந்தும் மாநில அரசு உருது அகாடமி அமைத்துள்ளது.
கிருஷ்ணா நதிநீர்த்திட்டத்தை, தெலுங்கு கங்கைத் திட்டமெனப் பெயர் மாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும். தற்போது நாங்கள் தி.மு.க.கூட்டணிக்குஆதரவு அளித்து வருகிறோம். எங்களுடைய கோரிக்கைகளுக்கு தி.மு.க.அரசு மதிப்புக் கொடுப்பதைப் பொறுத்து தொடர்ந்து தி.மு.க.கூட்டணியை ஆதரிப்பதாவேண்டாமா என்பதை முடிவு செய்வோம் என்றார் காமாட்சிநாயுடு.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications