துப்பாக்கியைத் தொலைத்த காவலர் சஸ்பெண்ட்
சேலம்:
எம்.எல்.ஏ.,வின் மெய்க்காப்பளரின் துப்பாக்கியை திருடிச் சென்றவர்களைப்போலீசார் கைது செய்தனர். மெய்காப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தமிழக சட்டசபையில் தமிழ் மாநில தேசிய லீக்கின் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர்இஸ்மாயில். இவர் கடந்த தேர்தலின் போது தி.மு.க., பா.ஜவுடன் கூட்டு சேருவதைஎதிர்த்து வெளியேறிய அப்துல் லத்தீப் தலைமையிலான தேசிய லீக் கட்சியில் இருந்துவந்தார்.
பின்னர் இக்கட்சியிலிருந்து விலகி தமிழ்மாநில தேசிய லீக் கட்சியில் சேர்ந்தார். இவரதுமெய்க்காப்பளராக கடந்த 28ம் தேதி ராஜகோபால் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இவர் எம்.எல்.ஏ.,வின் பாதுகாப்பிற்காக பள்ளபட்டியில் உள்ள அவரது வீட்டிற்குச்சென்றார். அங்கு பள்ளபட்டி வீட்டில் எம்.எல்.ஏ தங்கியிருந்தபோது, அவருக்குச்சொந்தமான எஸ்.டி.டி பூத்தில் தங்கினார்.
அவருடன் 9 எம்.எம் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். இந்த துப்பாக்கியுடன் 10தோட்டாக்களும் இருந்தன. இரவு தூங்கி எழுந்தவுடன், காலை 11 மணி அளவில்துப்பாக்கியை சரிபார்க்க ராஜகோபால் தேடினார்.
ஆனால் துப்பாக்கி காணமல் போயிருந்தது. துப்பாக்கி காணாமல் போன சம்பவம்குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து அவருடன் இரவு தங்கியிருந்த மினி பஸ் டிரைவர்மீரான், ராஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் இருவரும் துப்பாக்கியை எடுத்துச் சென்று போதூர் மலைப் பகுதியில்மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும், துப்பாக்கியை பாதுகாக்கத் தவறிய ராஜகோபால் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.